ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கன்னடத்திலிருந்து தெலுங்கு திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் நடிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக மாறியவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து இவரது நிகழ்ச்சிகள், புகைப்படங்கள், பேட்டிகள் என மீடியாக்களில் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் காந்தாரா படம் பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என்று கூறினார். இதில் அதிர்ச்சி என்னவென்றால் ராஷ்மிகா மந்தனாவை தான் இயக்கிய கிரிக் பார்ட்டி என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் தான் காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி.
அதனால் ராஷ்மிகா அப்படி பதில் சொன்னதும் கன்னட திரையுலகினரும் பலர் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக கன்னட திரையுலகில் இனி ராஷ்மிகா நடிப்பதற்கு தடைவிதிக்கும் அளவிற்கு சூழல் உருவானது. இந்த நிலையில் காந்தாரா படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கிஷோர் இதேபோன்று கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் 2 படத்தை பார்க்கவில்லை என குறிப்பிட்டு இருந்தார். தான் பார்க்கும் படங்களின் வகையிலான பட்டியலில் அந்த படம் இடம் பெறவில்லை என்றும் அதனால் அதைப் பார்க்கும் ஆர்வம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுவும் கன்னட திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் கிஷோர் கேஜிஎப் படத்தை பற்றி தவறாக கூறியதாக சித்தரித்து செய்திகள் பரவின.
இதை தற்போது மறுத்துள்ள கிஷோர் இதுபற்றி விளக்கம் அளிக்கும் விதமாக கூறும்போது, நான் கேஜிஎப் படத்தை பற்றி எந்த விதமான குறையும் சொல்லவில்லை. அந்த படத்தை பார்க்கவில்லை என்று தான் சொன்னேன். ஒருவேளை காந்தாரா படத்தை பார்க்கவில்லை என்று ராஷ்மிகா கூறியதற்காக அவரை கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது போல, என்னையும் கேஜிஎப் படத்தை பார்க்கவில்லை என்று சொன்னதற்காக கன்னடத்தில் நடிக்க தடை விதிப்பார்களோ என்றுதான் நான் கேட்டிருந்தேன்.. நான் சொன்ன கருத்துக்களை திரித்து பரப்பி விட்டார்கள்” என்று கூறியுள்ளார் கிஷோர்.