மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரா.வெங்கட் இயக்கி உள்ள படம் ‛கிடா'. இந்த படம் சமீபத்தில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் முதல் இடம் பிடித்து விருதினை பெற்றது. இதில் சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த ‛பூ' ராமு கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் காளி வெங்கட், பாண்டியம்மா, கமலி, லோகி, மாஸ்டர் தீபன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரா.வெங்கட் கூறியதாவது: இந்த படம் விருதுக்காக எடுக்கப்பட்டதல்ல. தியேட்டருக்கு வருவதற்கு சற்று தாமதம் ஆனதால் பெஸ்டிவலுக்கு அனுப்பி வைத்தோம். அது அனைவராலும் பாராட்டப்பட்டு விருதுகளை குவித்தது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது படத்தை பார்த்த அனைவரும் அதில் நடித்திருந்த ‛பூ' ராமு பற்றி விசாரித்தார்கள். அவருக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என்றார்கள். சென்னை திரைப்பட விழாவிலும் அதையே சொன்னார்கள். நாங்களும் படத்தை தேசிய விருதுக்கு அனுப்ப இருக்கிறோம். பூ ராமுக்கு விருது கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தீபாவளிக்கு புதுச்சட்டை கேட்கிறான் பேரன். ஏழை தாத்தாவால் அதை வாங்கி கொடுக்கிற அளவிற்கு பணமில்லை. அதனால் தனது ஆட்டை அவர் கசாப்பு கடை காரனுக்கு விற்கிறார். அந்த ஆட்டை நேசிக்கும் பேரன் எனக்கு சட்டையே வேண்டாம் ஆடுதான் வேண்டும் என்கிறான். இந்த நிலையில் ஆடு திருடு போகிறது. அந்த ஆடு இவர்களிடம் வந்து சேர்ந்ததா என்பதுதான் படத்தின் கதை. என்றார்.