வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

ராட்சசன் படத்தில் கொடூர சைக்கோ வில்லனாக நடித்தவர் சரவணன். அதன்பிறகும் சில படங்களில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹீரோவாகி இருக்கிறார். குற்றப்பின்னணி என்ற படத்தில் ஹீரோவாகும் அவருக்கு தீபாளி, தாட்சாயிணி என்ற இரு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கிறார்கள்.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை வாங்க வாங்க, ஐ.ஆர்.8 போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ளார். சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித் இசை அமைத்துள்ளார்.
இயக்குனர் இஸ்மாயில் கூறியதாவது: தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும், பார்த்தும் திகைக்கக்கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை. பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே குற்றப்பின்னணி. என்கிறார்.