இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்த படம் 'காந்தாரா'. படம் அங்கு வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அக்டோபர் 14ம் தேதி தமிழில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் ஓடி வருவது ஆச்சரியம்தான். உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்தாலும் மற்ற மொழிகளில் அதன் வசூலை ஒப்பிடும் போது தமிழ்ப் பதிப்பிற்கான வசூல் குறைவாகத்தான் உள்ளது. இங்கு சுமார் 10 கோடி வரைதான் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மலையாளத்தில் இதைவிடவும் அதிகமாக 15 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
கன்னடத்தில் தயாரான இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். கர்நாடகாவில் பேசப்படும் மற்றொரு மொழியான துளு மொழியிலும் இப்படத்தை டப்பிங் செய்து நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளனர்.