கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

கடந்த ஆண்டு வெளிவந்த ‛தேன்' படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றது. கணேஷ் விநாயகம் இயக்கி இருந்த இந்த படத்தில் தருண் குமார், அபர்ணதி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார், சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் தனது அடுத்து படம் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட திரைப்பட வல்லுர்களிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள். இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.




