விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் | வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான் |
கடந்த ஆண்டு வெளிவந்த ‛தேன்' படம் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றது. கணேஷ் விநாயகம் இயக்கி இருந்த இந்த படத்தில் தருண் குமார், அபர்ணதி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார், சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் தனது அடுத்து படம் குறித்து அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும், இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாக சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட திரைப்பட வல்லுர்களிடம் இந்த கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடம் சரியாக சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள். இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்கு தெரியாது, கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான நடிகர்கள் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.