ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2014ம் ஆண்டு வெளியான அப்புச்சி கிராமம் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் வி.ஐ.ஆனந்த். அதன்பிறகு தமிழில் படம் இயக்கவில்லை. தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு சந்தீப் கிஷன் நடித்த டைகர், நிகில் சித்தார்த்தா நடித்த எக்கடிக்கு போதாவு சின்னவாடா, அல்லு சிரிஷ் நடித்த ஒக்க ஷணம், ரவிதேஜா நடித்த டிஸ்கோ ராஜா படங்களை இயக்கினார்.
தற்போது சந்தீப் கிஷன் நடிக்கும் 'ஊரு பேரு பைரவகோனா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில காவ்யா தாப்பர், வர்ஷா பொல்லம்மா, ரவிசங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஹாஸ்யா மூவிஸ், ஏகே என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் தயாரிக்கிறது. சூப்பர் நேச்சுரல் பேன்டஸி படமாக பெரிய பட்ஜெட்டில் இது உருவாகிறது. தெலுங்குடன் சேர்த்து தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஆனந்த்.