இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரும், 'ஆர்ஆர்ஆர்' படக் கதாநாயகியுமான ஆலியா பட் பத்து நாட்களுக்கு முன்பு நவம்பர் 6ம் தேதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். அவருக்கும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. ஜுன் மாதத்தில் ஆலியா தாய்மை அடைந்திருப்பதாக ரன்பீர் கபூர் அறிவித்தார்.
திருணமாகி, தாய்மை அடைந்த பின்னும் ஆலியா பட் அவர் நடித்து வெளிவந்த படங்களான 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' ஆகிய படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றி பெற்றது.
குழந்தை பெற்ற பின் கடந்த பத்து நாட்களாக தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் எதையும் பகிராமல் இருந்தார். நேற்று அவருடைய உருவம் சரியாகத் தெரியாத அளவுக்கு 'அவுட் ஆப் போகஸ்' செய்து, கையில் 'மம்மா' என்று எழுதியிருந்த காபி கோப்பைக்கு போகஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் லைக் செய்த, அந்த புகைப்படத்திற்குக் கூட 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.