ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
ராம்கோபால் வர்மா எப்போதுமே சர்ச்சையான இயக்குனர். அதிரடி கருத்துக்களை கூறி பரபரப்பு ஏற்படுத்துவார், சர்ச்சையிலும் சிக்குவார். அதேபோல வில்லங்க படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் லெஸ்பியன் உறவை பற்றி படம் எடுத்து அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் கிடப்பில் உள்ளது.
என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா ஆனபோது இவர் லட்சுமி என்டிஆர் என்ற படத்தை எடுத்தார். ஜெயலலிதா வாழ்கை படமானபோது சசிகலா வாழ்க்கையை படமாக்க போவதாக அறிவித்தார். இப்படி அதிரடியாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அவரின் அடுத்த அதிரடி தமிழக அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறது.
தமிழக அரசியலை மையப்படுத்தி வியூகம், சபதம் என்ற பெயரில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது இரண்டு பாகங்கள் கொண்ட படம் என்றும், ஒன்று ஷாக்காக இருக்கும் இன்னொன்று எலெக்ட்டிரிக் ஷாக்காக இருக்கும் என்றும், இது அரசியல் படம் என்றாலும் குறிப்பிட்ட கட்சியை பற்றியோ தலைவரை பற்றியோ இருக்காது என்றும் அறிவித்திருக்கிறார். விரைவில் நடிகர் நடிகைகள் பற்றி அறிவிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.