பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'.
இரண்டு பாகங்களாக வரும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டுளளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் போட்டோ ஷுட் வேலைகள் ஆரம்பமாகின. அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. முதலில் திரைக்கதை உருவாக்கத்தால் தாமதமானது. தற்போதைய தாமதத்திற்கு திருப்தியான லொகேஷன்கள் கிடைக்கவில்லை என்று தகவல். இதனால், பகத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் தங்களது தேதிகளை மீண்டும் மாற்றித் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2023ல் இரண்டாம் பாகம் வெளியாவது சந்தேகம்தான், 2024 துவக்கத்தில் வேண்டுமானால் வெளியாகலாம்.