இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தனுஷ் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் 'வாத்தி'. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரிக்க, தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கியுள்ள படம் இது. இப்படத்தின் டீசர் மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியானது. படத்தின் டீசரைப் பற்றி மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்திருந்தார் தனுஷ்.
அதற்குப் பிறகு 'வாத்தி' படத்தை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கடுத்து வெளியான 'திருச்சிற்றம்பலம், நானே வருவேன்' ஆகிய படங்களைப் பற்றியும், அவர் தற்போது நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தைப் பற்றி மட்டுமே பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு கூட 'வாத்தி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். அதையும் தனுஷ் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார், “வாத்தி' படத்தின் முதல் சிங்கிள் விரைவில்…பாடலை எழுதியது பொயட்டு தனுஷ்…ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு பற்றி நேற்று ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். தான் எழுதிய இந்தப் பாடல் பற்றி கூட தனுஷ் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
இதனிடையே, டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல் பரவியது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படத்தின் பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இருப்பினும் 'வாத்தி' படத்தை தனுஷ் தவிர்ப்பது ஏன் என அவரது ரசிகர்களும் ஆச்சரியத்துடன் உள்ளனர்.