ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதன் முதலில் ரூ.500 கோடியைத் தொடப் போகிறது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனமே படம் 500 கோடியைக் கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த வாரம் 450 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு தீபாவளி விடுமுறை நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களுடனும் போட்டி போட்டு 'பொன்னியின் செல்வன்' படமும் நல்ல வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த வார நாட்களிலும் பல தியேட்டர்களில் நல்ல முன்பதிவு நடைபெற்றுள்ளது.
படம் வெளியான மற்ற மொழிகளில் அதிக வசூலைப் பெறாமல் தமிழில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் 1000 கோடி வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், படத்தை தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் என மற்ற மொழி ரசிகர்கள் நினைத்தது படத்திற்கு அந்தந்த மொழிகளில் மைனஸ் ஆகிவிட்டது.