ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா |
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் முதன் முதலில் ரூ.500 கோடியைத் தொடப் போகிறது என்பது ஒரு சரித்திரம். அந்த சாதனையை சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் அடுத்த சில நாட்களில் நிகழ்த்த உள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனமே படம் 500 கோடியைக் கடந்தது என்ற அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த வாரம் 450 கோடி வசூலைக் கடந்ததாக அறிவித்திருந்தார்கள். அதற்குப் பிறகு தீபாவளி விடுமுறை நாட்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களுடனும் போட்டி போட்டு 'பொன்னியின் செல்வன்' படமும் நல்ல வசூலைப் பெற்று திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த வார நாட்களிலும் பல தியேட்டர்களில் நல்ல முன்பதிவு நடைபெற்றுள்ளது.
படம் வெளியான மற்ற மொழிகளில் அதிக வசூலைப் பெறாமல் தமிழில் மட்டுமே 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற மொழிகளிலும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருந்தால் 1000 கோடி வசூலைத் தொட்டிருக்கும். ஆனால், படத்தை தமிழ் மன்னனின் வாழ்க்கை வரலாற்றுப் படம், அதை ஏன் நாம் பார்க்க வேண்டும் என மற்ற மொழி ரசிகர்கள் நினைத்தது படத்திற்கு அந்தந்த மொழிகளில் மைனஸ் ஆகிவிட்டது.