லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன், 'டுவிட்டரில்' பதிவிட்டார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பிறந்திருப்பதால், உரிய விதிமுறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்குனர் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள, பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில், 2021 டிச., மாதத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாகவே குழந்தை பெற்று எடுத்ததாகவும், விதி மீறப்படவில்லை எனவும், விசாரணை குழுவிடம், நயன்தாரா தரப்பில் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்து உள்ளதாக தெரிகிறது.