விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ள நிலையில், படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் 3 பேர் இணைந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் உலா வந்தது. ஆனால், அவர்கள் யார்? யார்? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவ்னி ரெட்டி, மற்றும் சிபி புவனசந்திரன் ஆகியோர் தாய்லாந்து ரெஸ்டாரண்ட் ஒன்றில் அஜித்துடன் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், அந்த புகைப்படங்களில் அஜித்தே மூவருடனும் சேர்ந்து செல்பியை கிளிக் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது வெளியிட்டுள்ள பாவ்னி, 'என்ன சொல்ல, எப்படி சொல்ல? சொன்னால் யார் நம்புவார்கள். அற்புதமான மனிதர்?' என அஜித்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து ஜோடியாகவே அஜித் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ள அமீர் - பாவ்னிக்கும், பிக்பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு படவாய்ப்புக்காக காத்திருந்த சிபிக்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மூவருக்கும் அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.