ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் | இரவு 12மணிக்கு மிஷ்கினுக்கு ஐ லவ் யூ சொன்ன இயக்குனர் | 2வது வாரத்தில் கூடுதல் தியேட்டர்களில் 'காந்தாரா சாப்டர் 1' | எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இடைவிடாத பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்குள்ள மீடியாக்கள் அவரிடத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கையில், ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையும் போது மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதோடு என்னை பொருத்தவரை ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிய பிறகு அதற்கு உரிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன். நடிகர்களை கருத்தில் கொண்டு கதைகளை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.