'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இடைவிடாத பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்குள்ள மீடியாக்கள் அவரிடத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கையில், ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையும் போது மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதோடு என்னை பொருத்தவரை ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிய பிறகு அதற்கு உரிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன். நடிகர்களை கருத்தில் கொண்டு கதைகளை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.




