பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி. உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தனித்துவிடப்பட்ட தனக்கு அரசு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெய்குமாரியை சந்தித்தார். அங்கு அவருக்கு நல்ல முறையில் உயர்சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகளை செய்தார். அவருக்கு பண உதவி செய்த அமைச்சர், முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்தார்.