பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் |

சின்னத்திரையில் சீரியல் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது கேரியரை மொத்தமாக மாற்றிக் கொண்டார். சினிமாவில் நடிக்க முயற்சி செய்த ஷிவானி, இன்ஸ்டாவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பிடித்தார். இந்த ட்ரிக் ஓரளவு வொர்க் அவுட் ஆன நிலையில், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. எனினும், அது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய ரோல் இல்லை. அதன்பிறகு ஷிவானி சீரியலிலோ, சினிமாவிலோ எந்த ப்ராஜெக்டிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், ஷிவானி தற்போது '8 தோட்டக்கள்' வெற்றிக்கு ஜோடியாக 'பம்பர்' படத்தில் கமிட்டாகி தனது ஹீரோயின் கனவை நனவாக்கியுள்ளார்.
கேரளா லாட்டரியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தை முத்தையாவின் உதவி இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். ஹீரோயின் ஷிவானிக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.