பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயல்பட்டவர் லலித் மோடி. அதன்பிறகு சில ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து அங்கு லலித் வசித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியில் அவரது பெயர் இடம் பெறும்.
கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் 'புதிய வாழ்க்கை' ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சுஷ்மிதா சென் பற்றி தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்ததை தற்போது நீக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சுஷ்மிதா கடந்த வாரம் அவரது முன்னாள் ஆண் நண்பரான ரோஹ்மான் ஷால் உடன் சுற்றியதே அதற்குக் காரணம் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் இன்ஸ்டா தளத்தில் சுஷ்மிதா உடன் உள்ள புகைப்படங்களை லலித் நீக்கவில்லை.