மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராக செயல்பட்டவர் லலித் மோடி. அதன்பிறகு சில ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்து அங்கு லலித் வசித்து வருகிறார். அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தியில் அவரது பெயர் இடம் பெறும்.
கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் 'புதிய வாழ்க்கை' ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சுஷ்மிதா சென் பற்றி தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்ததை தற்போது நீக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சுஷ்மிதா கடந்த வாரம் அவரது முன்னாள் ஆண் நண்பரான ரோஹ்மான் ஷால் உடன் சுற்றியதே அதற்குக் காரணம் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் இன்ஸ்டா தளத்தில் சுஷ்மிதா உடன் உள்ள புகைப்படங்களை லலித் நீக்கவில்லை.