தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் பல வருடப் போராட்டங்களுக்குப் பிறகு கதாநாயகனாக ஒரு இடத்தைப் பிடித்துள்ளவர் அருண் விஜய். 1995ல் அறிமுகமானாலும் அவர் நடிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பாக வெளிவந்த 'மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்க' படங்களின் மூலம் கொஞ்சம் முன்னேறி வந்தார். அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அவருக்கு இன்னும் அதிகமான பிரபலம் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி சில நல்ல கதைகளில் நடித்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
அருண் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'யானை' படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர் நடித்து முடித்து கொரானோ தாக்கம் காரணமாக வெளியாகாமல் இருந்த சில படங்களை அடுத்தடுத்து வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அந்த விதத்தில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'சினம்' படம் செப்டம்பர் மாதம் 16ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'பார்டர்' படம் அக்டோபர் 5ம் தேதியும் வெளியாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள 'அக்னிச் சிறகுகள்' படமும் அப்படங்களுக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.