மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! | காப்புரிமை தொடர்பான 'சோனி' வழக்கு : இளையராஜா பதில் அளிக்க கோர்ட் உத்தரவு | ப்ரீ புக்கிங்கில் முந்தும் 'டியூட்' | 3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை மீரா மிதுன் ஆஜர் |
நம் நாடு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(ஆக.,13) முதல் வீடு தோறும் மூன்று தினங்களுக்கு வீட்டில் கொடியேற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கும்படி கேட்டிருந்தார் பிரதமர். திரையுலகினர் பலரும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் ரஜினி, பிரசன்னா, செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட வெகுசிலரே தங்களின் சமூகவலைதள முகப்பு போட்டோவை மாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளரும், சமீபத்தில் ராஜ்சபா எம்பியாகவும் பொறுப்பேற்ற இளையராஜாவும் சமூகவலைதளத்தில் தனது முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார்.