தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

'நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் கன்னட நடிகரான சுதீப். அதன்பின் விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்தார். 'முடிஞ்சா இவன புடி' என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். கடைசி இரண்டு படங்களும் தோல்விப் படங்களாகத்தான் அமைந்தன.
தற்போது அவர் 'விக்ராந்த் ரோணா' என்ற கன்னடப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து அதை பான்--இந்தியா படமாகவும் நாளை(ஜூலை 28) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறார். ஒரு பான்--இந்தியா படமாக வெளிவந்தாலும் கன்னடத்தைத் தவிர மற்ற மொழிகளில் இந்தப் படம் எந்தவிதமான பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.
கன்னடத்தில் தயாராகி பான்--இந்தியா படமாக வெளிவந்த படங்களில் 'கேஜிஎப்' படங்கள் மட்டுமே இங்கும் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து வெளிவந்த '777 சார்லி' படத்திற்கும் இங்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுதீப் நடித்துள்ள 'விக்ராந்த் ரோணா' படத்திற்கு மேலே சொன்ன இரண்டு படங்களுக்கும் இடையிலான சுமாரான வெற்றியாவது கிடைக்குமா என்பது நாளை தெரியும்.