ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். அடுத்தபடியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போகிறார். டான் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் நெல்சன், நடிகர் கவின் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரியங்கா மோகன், தற்போது பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெளிநாடுகளில் எடுத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்கா மோகன், தற்போது லண்டனில் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் இந்தியா திரும்ப இருக்கும் பிரியங்கா மோகன், அந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67 வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழில் முன்னணி நடிகை பட்டியலில் பிரியங்கா மோகன் இடம் பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.