விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
எஸ்.பி.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ள படம் ‛ஜோதி'. ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா இயக்கி உள்ளார். இதில் வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிரிஷா க்ரூப், குமரவேல், சாய்பிரியங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது : இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி உள்ள படம். கடலூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் பிறந்த குழந்தையை இன்னொரு பெண் திருடிச் சென்றார். டி.எஸ்.பி சாந்தி என்ற போலீஸ் அதிகாரி 2 மணிநேரத்தில் குழந்தையை மீட்டார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. குழந்தை கடத்தலின் பின்னணியில் இருப்பது யார். எதற்காக கடத்துகிறார்கள் என்கிற உண்மைகளை படம் பேசப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.