தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018ம் ஆண்டு கிரான்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி, மே மாதங்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்லிசனை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியா தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.