அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி | உருட்டு உருட்டு : நாகேஷ் பேரன் நாயகனாக நடிக்கும் படம் |
செஸ் வீரர் பிரக்ஞானந்தா கடந்த 2018ம் ஆண்டு கிரான்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த பிப்ரவரி, மே மாதங்கள் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்லிசனை வீழ்த்தி சாதனை படைத்தார். ஜூலை 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியா தொடரிலும் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார் பிரக்ஞானந்தா. அப்போது செஸ் ஒலிம்பியா தொடரிலும் அவர் வெற்றி பெற வாழ்த்திய ரஜினிகாந்த், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார். அதையடுத்து ரஜினிக்கு பிரக்ஞானந்தாவும் செஸ் போர்டு ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து, "மறக்க முடியாத நாள் இன்று. ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன். எவ்வளவோ உயரங்களை அடைந்த போதும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி## என்று பதிவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.