தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். பிரிந்து வாழப் போவதாக அறிவித்தபோதும் மகன்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை இணைந்து வாழச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா, ‛பயணி' என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நடித்துள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மகன்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றிருந்தார் தனுஷ். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்கள். அதையடுத்து மகன்கள் இருவரையும் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, ‛‛சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே'' என பதிவிட்டுள்ளார்.




