நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
நடிகர் தனுஷ், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினி ஆகிய இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு தாங்கள் பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள். பிரிந்து வாழப் போவதாக அறிவித்தபோதும் மகன்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை இணைந்து வாழச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா, ‛பயணி' என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கியவர் அடுத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் படம் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நடித்துள்ள தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தின் பிரிமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மகன்கள் இருவரையும் அமெரிக்கா அழைத்துச் சென்றிருந்தார் தனுஷ். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்கள். அதையடுத்து மகன்கள் இருவரையும் கட்டித்தழுவி வரவேற்றுள்ளார் ஐஸ்வர்யா. அதோடு, ‛‛சில நேரங்களில் உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே'' என பதிவிட்டுள்ளார்.