தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி | இன்னும் இசையை கற்பதால் உழைக்கிறேன் : ‛பத்மபாணி' விருது பெற்ற இளையராஜா பேச்சு | திருமண செய்திகளுக்கு பதில் சொல்ல மறுத்த மிருணாள் தாக்கூர் | தெலுங்கு சினிமா என்னை ஏமாற்றி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம் | ஜவான் 2 தொடங்குவது எப்போது? அட்லி கொடுத்த விளக்கம் | 100 மில்லியனைக் கடந்த 'மோனிகா' வீடியோ பாடல் : அனிருத்திற்கு 45 |

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவேந்திரன். புலி ராகவேந்திரன் என்று சொன்னால் தான் நேயர்களுக்கு தெரியும் வகையில், அவர் நடித்த 'புலி' என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் சம்பள பிரச்னை, வீட்டில் கமிட்மெண்ட் என சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சோகமான வீடியோ ரசிகர்களையும் கண்ணீர் விட செய்தது.
இந்நிலையில், அவர் வாழ்வில் மேலும் ஒரு சோகமான சம்பவமாக புலி ராகவேந்திரனின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ராகவேந்திரனின் உடல்நலம் மோசமடைய தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ட்யூபுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவேந்திரன், 'ஒரே ஒரு ஒன்சைட் லவ், டோட்டல் பாடி க்ளோஸ். வேணாம் நண்பர்களே' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பரிதாப நிலையை பார்த்து சோகமான ரசிகர்கள், ராகவேந்திரனுக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.