'ஆர்யன்' படத்தில் 'கண்ணூர் ஸ்குவாட்' இன்ஸ்பிரேஷன் ; மனம் திறந்த விஷ்ணு விஷால் | நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | மீண்டும் அதிக வெளியீடுகள் ஆரம்பம்… | கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித் | ஓடிடி ரிலீஸ் : 1000 கோடியைத் தவறவிடும் 'காந்தாரா சாப்டர் 1' | அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது |

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவேந்திரன். புலி ராகவேந்திரன் என்று சொன்னால் தான் நேயர்களுக்கு தெரியும் வகையில், அவர் நடித்த 'புலி' என்கிற கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார். கடைசியாக 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராகவேந்திரன் சம்பள பிரச்னை, வீட்டில் கமிட்மெண்ட் என சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சோகமான வீடியோ ரசிகர்களையும் கண்ணீர் விட செய்தது.
இந்நிலையில், அவர் வாழ்வில் மேலும் ஒரு சோகமான சம்பவமாக புலி ராகவேந்திரனின் காதல் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் ராகவேந்திரனின் உடல்நலம் மோசமடைய தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் கையில் ட்ரிப்ஸ் ட்யூபுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராகவேந்திரன், 'ஒரே ஒரு ஒன்சைட் லவ், டோட்டல் பாடி க்ளோஸ். வேணாம் நண்பர்களே' என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அவரின் இந்த பரிதாப நிலையை பார்த்து சோகமான ரசிகர்கள், ராகவேந்திரனுக்கு ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.