ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
தமிழ் சினிமாவில் மைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். அதன் பிறகு விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவா படத்தில் அமலாபால் நாடியகியாக நடித்தார். அப்போது, ஏ.எல். விஜய்யும் -அமலா பாலும் காதலிக்கத் தொடங்கி, 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் 2017ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றார்கள். அதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற டாக்டரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
ஆனால் அமலா பால் இப்போது வரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாகவே அவ்வப்போது திருமண வதந்திகளிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அமலாபால் உரையாடிய போது ஒரு ரசிகர், உங்களை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அமலாபால், அந்த தகுதி என்னவென்று இன்னும் எனக்கு தெரியவில்லை. அதோடு என்னை நானே புரிந்து கொள்ளும் பயணத்தில்தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதி வேண்டும் என்பதை கண்டுபிடித்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அமலா பால்.