ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் |

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி சரத்குமார், தனஞ்செயன், மேகா ஆகாஷ் உள்பட பலர் நடித்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவா டையூ டாமன் ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது.
தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தொடர்ந்து கூறிவந்தார். தற்போது விஜயகாந்த் நடிக்காமலயே படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
இந்த படத்தில் விஜயகாந்த் இரண்டு காட்சியில் மட்டும் நடித்தால் போதும் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் நடிக்கவில்லை. தற்போது அவரது குரலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.
இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது: விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது காட்சியின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இருப்பினும் விரைவில் அவருடைய காட்சியை படமாக்குவோம் என்றும் நம்பிக்கை உள்ளது. ஒருவேளை அது சாத்தியப்படாவிட்டால் அவரது குரலை பயன்படுத்துவோம். இந்த படத்திற்கு விஜயகாந்த் எவ்வளவு முக்கியம் என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும். என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.