தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி சரத்குமார், தனஞ்செயன், மேகா ஆகாஷ் உள்பட பலர் நடித்த படம் 'மழை பிடிக்காத மனிதன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவா டையூ டாமன் ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது.
தற்போது படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் தொடர்ந்து கூறிவந்தார். தற்போது விஜயகாந்த் நடிக்காமலயே படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.
இந்த படத்தில் விஜயகாந்த் இரண்டு காட்சியில் மட்டும் நடித்தால் போதும் என்று விஜய் மில்டன் கூறியிருக்கிறார். ஆனால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் நடிக்கவில்லை. தற்போது அவரது குரலை மட்டும் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார்கள்.
இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது: விஜயகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது காட்சியின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இருப்பினும் விரைவில் அவருடைய காட்சியை படமாக்குவோம் என்றும் நம்பிக்கை உள்ளது. ஒருவேளை அது சாத்தியப்படாவிட்டால் அவரது குரலை பயன்படுத்துவோம். இந்த படத்திற்கு விஜயகாந்த் எவ்வளவு முக்கியம் என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும். என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.