இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் உதயம், மாஸ் என்ற மாசிலாமணி, சகுனி என பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கர்ப்பமான பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரணிதா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛உண்மையிலேயே நான் ஒரு அதிர்ஷ்டசாலி. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் உள்ள டாக்டர் சுனில் உதவிடன் சீராக பிரசவம் நடைபெற்றது. என்னுடைய பிரசவ வலியை குறைப்பதற்காக முயற்சி எடுத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவக்குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு விருப்பமாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ள பிரணிதா, மருத்துவமனையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.