கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதையடுத்து நோட்டா, கழுகு-2, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தார். இடையில் விபத்தில் சிக்கி மீண்டு வந்தார். தற்போது கடமையைச் செய், பாம்பாட்டம், பஹீரா, சிறுத்தை சிவா, தி லைஜன்ட், பெஸ்டி உள்பட பத்து படங்கள் இவர் கைவசம். உள்ளன. இவற்றில் சில படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.
இதில் எஸ் .ஜே. சூர்யா உடன் இணைந்து அவர் நடித்துள்ள கடமையைச் செய் படம் ஜூன் 24ல் திரைக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து ரங்கா இயக்கத்தில் அவர் நடித்துள்ள பெஸ்டி என்ற படம் ஜூலை 1ல் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு யாஷிகாவின் படங்கள் வெளியாக உள்ளன.