இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் இவர், தற்போது பிரித்விராஜ் நடிப்பில் கடுவா மற்றும் மோகன்லால் நடிப்பில் அலோன் என இரண்டு படங்களை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ஷாஜி கைலாஷ். எழுத்தாளர் இந்துகொபன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..
குறிப்பாக இந்த படத்தின் கதை பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்திற்கும் பின்க் போலீஸ் என்றே டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் நடிப்பதற்கு நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் இந்த மூவரில் ஒருவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிட வேண்டுமென்று ஷாஜி கைலாஷ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




