பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் கமர்சியல் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ். மோகன்லால், சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் இவர், தற்போது பிரித்விராஜ் நடிப்பில் கடுவா மற்றும் மோகன்லால் நடிப்பில் அலோன் என இரண்டு படங்களை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் ஷாஜி கைலாஷ். எழுத்தாளர் இந்துகொபன் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்..
குறிப்பாக இந்த படத்தின் கதை பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. படத்திற்கும் பின்க் போலீஸ் என்றே டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் வலுவாக உருவாக்கப்பட்டுள்ளதால் அதில் நடிப்பதற்கு நயன்தாரா, சமந்தா மற்றும் வித்யாபாலன் இந்த மூவரில் ஒருவரை எப்படியாவது ஒப்பந்தம் செய்துவிட வேண்டுமென்று ஷாஜி கைலாஷ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.