இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி போன்ற படங்களை தயாரித்த நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பஸ் கரோ ஆன்ட்டி. வருண் அகர்வால் எழுதிய நாவலை தழுவி உருவாகிறது. அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கின்றனர்.
படம் பற்றி இயக்குனர் அபிஷேக் சின்ஹா கூறியதாவது: இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களின் நிஜ வாழ்க்கை அனுபவத்தைப் பற்றியது. மற்றும் ஒரு புதிய வாழ்க்கைப் பாதையில் இறங்கி முயற்சிப்பது மற்றும் ஒருவரின் கனவுகளைத் துரத்துவது எனும் வாழ்க்கை முறையில், அவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் மற்றும் காதல், அவர்களின் இக்கட்டான நிலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது.
இளம் இந்தியாவின் ஆர்வத்தையும் தொழில்முனைவோரின் உணர்வையும், நகைச்சுவை நிறைந்த, ஊக்கமளிக்கும் கதையாக இப்படம் சொல்கிறது. யதார்த்தமான காட்சிகளால் படம் நிறைந்திருப்பதால் இது அடல்ட் கண்டன்ட் வகை படமாகிறது. என்றார்.