மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாள நடிகரான துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து மூன்று படங்களில் நடித்துவிட்டார். அந்த வகையில் தெலுங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் உள்ளே நுழைந்த துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் என்கிற தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட்-5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது