'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாள நடிகரான துல்கர் சல்மான் தென்னிந்திய மொழிகளில் கன்னடம் தவிர மற்ற மூன்று மொழிகளிலும் சரிசமமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து மூன்று படங்களில் நடித்துவிட்டார். அந்த வகையில் தெலுங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான மகாநடி படத்தின் மூலம் உள்ளே நுழைந்த துல்கர் சல்மான் தற்போது சீதாராமம் என்கிற தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் நடித்து முடித்து விட்டார்.
இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, முக்கியமான வேடத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட்-5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெப்டினன்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். போர் பதற்றம் நிறைந்த எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் இளம் பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது