சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளன. இதில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் கேஜிஎப் -2 படம் உலகம் முழுவதும் 1200 கோடி வசூல் செய்திருக்கிறது. கன்னட படங்களில் இது மிகப்பெரிய வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே கேஜிஎப்-3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அப்படக்குழு ஒரு தகவல் வெளியிட்டிருந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன. மேலும் கேஜிஎப்-3 படத்தை 2024ம் ஆண்டு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களில் இருந்து இந்த மூன்றாம் பாகத்தில் மாறுபட்ட கெட்டப்பில் யஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.