நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
கவுதம் மேனன், சிம்பு, திரிஷா கூட்டணியில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? எப்போது உருவாகும்? என்று சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவுதம் மேனனிடத்தில் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அதோடு கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.