டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கவுதம் மேனன், சிம்பு, திரிஷா கூட்டணியில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? எப்போது உருவாகும்? என்று சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவுதம் மேனனிடத்தில் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அதோடு கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.