கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருக்கும் படம் o2. த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்கிறாள். அவளது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் அவனுடன் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்குகிறது. அப்போது பஸ்சுக்குள் இருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை. அந்த பெண்ணின் மகனிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை அபகரிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவள் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் பார்வதியாக நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது என்றார்.