'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி, தற்போது குழந்தைகள் படத்தை இயக்கியுள்ளார். ‛அக்கா குருவி' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா 3 பாடல்களை அவரே எழுதி, இசையமைத்துள்ளார். சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‛அக்கா குருவி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஏப்.,25) நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளையராஜா பேசியதாவது: உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அப்படி சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை பார்க்கும்போது எனக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.
ஒரு ஷூவை வைத்துக் கொண்டு குழந்தைகளின் உலகத்தை தத்ரூபமாக தந்திருந்தது சிறப்பான அனுபவத்தை தந்தது. ஏன் இத்தகைய படங்கள் தமிழில் வருவதில்லை என்று எனக்கு வருத்தமாக இருந்தது. ஒரு கலைஞனுக்கு உயர்வான சிந்தனை தோன்றினால் தான் அவனை தாக்கினால் தான். இவன் உயர்வான ஒன்றை உருவாக்க முடியும். இப்படி படம் எடுக்க முடியும். அது நம் இயக்குநர்களிடம் இல்லை. அந்தக் குறையை தற்போது இயக்குனர் சாமி போக்கியுள்ளார்.
தற்போது சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை நம்முடைய ஊருக்கு தகுந்தவாறு கதையை மாற்றி ஒரிஜினல் படத்தைவிட சுவாரஸ்யமாக இயக்குனர் சாமி கொடுத்துள்ளார். இதுபோன்ற புதிய இயக்குனர்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். நான் முதன்முறையாக இயக்குனர் மணிரத்னத்திற்கு இசையமைத்ததற்கு இதுதான் காரணம். இதுபோன்ற நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய படங்கள் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.