ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று(ஏப்., 11) காலை பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் உட்பட 24 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா நகரி தொகுதி எம்.எல்.ஏ. வாக உள்ளார். நடிகையாக இருந்த இவர் இன்று அமைச்சராக உயர்வு பெற்றுள்ளார்.