பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒரு படம்.
படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகன் சிம்புவின் அப்பா டிஆருக்கும் இடையில் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் படத்தின் சக்சஸ் மீட் அதன்பின் படத்தின் 50வது நாள் விழா ஆகிய நிகழ்வுகளில் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
படத்தின் 100வது நாளில் தியேட்டருக்குச் சென்று சிம்பு ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சௌத்' விருது வழங்கும் விழா ஒன்றில் 'மாநாடு' படத்திற்கு 'சென்சேஷனல் பிளாக்பஸ்டர் ஆப் த இயர்' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, நடிகை கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர். தயாரிப்பாளரும், நாயகனும் மீண்டும் இணைந்து விருது வாங்கியது திரையுலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
'மாநாடு' படம் வெற்றி பெற்றதுமே ரசிகர்கள் அதன் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டனர். அது நிறைவேறுமா என்பது குறித்து படக்குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.