அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்த 'மாநாடு' படம் கடந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் முக்கியமான ஒரு படம்.
படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும், நாயகன் சிம்புவின் அப்பா டிஆருக்கும் இடையில் படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. அந்த சமயத்தில் படத்தின் சக்சஸ் மீட் அதன்பின் படத்தின் 50வது நாள் விழா ஆகிய நிகழ்வுகளில் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
படத்தின் 100வது நாளில் தியேட்டருக்குச் சென்று சிம்பு ரசிகர்களுடன் கொண்டாடினார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் சௌத்' விருது வழங்கும் விழா ஒன்றில் 'மாநாடு' படத்திற்கு 'சென்சேஷனல் பிளாக்பஸ்டர் ஆப் த இயர்' விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, நடிகை கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றனர். தயாரிப்பாளரும், நாயகனும் மீண்டும் இணைந்து விருது வாங்கியது திரையுலகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது.
'மாநாடு' படம் வெற்றி பெற்றதுமே ரசிகர்கள் அதன் 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டனர். அது நிறைவேறுமா என்பது குறித்து படக்குழுவினர்தான் தெரிவிக்க வேண்டும்.