ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார். கோவிட்டுக்குப் பிந்தைய பாதிப்புகளால் சிகிச்சை மேற்கொண்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மீண்டும் தன்னுடைய 'முசாபிர்' ஆல்பப் பணிகளை ஆரம்பித்துள்ளார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் அதைப் பார்க்கும் போது ஒரு மேஜிக் உருவாவதைப் பார்க்க முடியும், அது ஒரு புதிய உலகம்… மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டேன். மீண்டும் திரும்பியது சிறப்பு…. நான் இங்கு நீண்ட நாட்களாக இல்லாததால்… படப்பிடிப்பில் இருப்பது போல் எதுவும் சிறப்பில்லை…” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா தற்போது 'முசாபிர்' என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த ஆல்பத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தமிழில் 'பயணி', தெலுங்கில் 'சஞ்சாரி', மலையாளத்தில் 'யாத்ராக்காரன்', ஹிந்தியில் 'முசாபிர்' என்றும் இந்த ஆல்பம் வெளியாக உள்ளது. தமிழ்ப் பாடலை அனிருத் பாடுகிறார். போஸ்டரில் ஐஸ்வர்யாவின் பெயர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போடப்பட்டுள்ளது.