ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… | காதலர் தின ஸ்பெஷல் 4 ரீ ரிலீஸ் | பிப்ரவரி 13ல் ரிலீஸ் ஆகும் படங்கள்… | ஆண் கர்ப்பமானால்... தமிழில் தயாராகியுள்ள வெப் தொடர் |

தமிழ் சினிமா துறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் என்ற அமைப்பும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படபிடிப்பு தளங்களுக்கு சென்று ரெய்டு என்கிற பெயரில் பணி வாய்ப்பை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.பாபு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இரு சங்க நிர்வாகிளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் முடிவில் ஒரு சங்க உறுப்பினர்களின் பணியை மற்றொரு சங்கத்தினர் தடுக்கவோ, இடையூறு செய்யவோ கூடாது என இரு சங்கத்திடமும் கடிதம் பெறப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




