ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

தமிழ் சினிமா துறையில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் என்ற அமைப்பும், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்ற அமைப்பும் செயல்பட்டு வருகிறது.
இதில் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தை சார்ந்த உறுப்பினர்கள் பணியாற்றும் படபிடிப்பு தளங்களுக்கு சென்று ரெய்டு என்கிற பெயரில் பணி வாய்ப்பை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ.பாபு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இரு சங்க நிர்வாகிளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் முடிவில் ஒரு சங்க உறுப்பினர்களின் பணியை மற்றொரு சங்கத்தினர் தடுக்கவோ, இடையூறு செய்யவோ கூடாது என இரு சங்கத்திடமும் கடிதம் பெறப்பட்டு பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாடு திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர் சங்க பொதுச் செயலாளர் வீ.பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




