56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் 2.0 வரை நடித்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் அங்கு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பீட்டா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ஆயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில பாதாள அறைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு எமி ஜாக்சன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது வருமாறு: உக்ரைனின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. உக்ரைன் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு அவசர நிதி தேவை. தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கவும். என்று குறிப்பிட்டுள்ளார்.