'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் 2.0 வரை நடித்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் அங்கு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பீட்டா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ஆயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில பாதாள அறைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு எமி ஜாக்சன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அது வருமாறு: உக்ரைனின் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. உக்ரைன் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு அவசர நிதி தேவை. தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பின் மூலம் நன்கொடை அளிக்கவும். என்று குறிப்பிட்டுள்ளார்.