மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் 2008ல் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குனரும், நடிகருமான சசிகுமார். அப்படத்தைப் பார்த்து பல மொழி சினிமா பிரபலங்களும் பாராட்டினார்கள்.
பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மிகப் பெரும் ரசிகரும் கூட. அப்படம் பற்றி பல சந்தர்ப்பங்களில் பெருமையாகப் பேசியுள்ளார். படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த போது, கடந்த 2018ம் வருடம் அவர் போட்ட பதிவு ஒன்றில் “கடந்த தசாப்தத்தின் எனது அபிமானத் திரைப்படம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “இப்போது நீங்கள் நடிகர், இன்னும் பல படங்களைக் கொடுங்கள்” என்று சசிகுமாருக்கு டேக் செய்திருந்தார். அவருக்கு பதிலளித்த சசிகுமார், “எனது அபிமான இயக்குனரின் பாராட்டுக்கள், விரைவில் எனது இயக்கத்தில் ஆரம்பிப்பேன் சார்,” என்றார்.
ஆனால், இரண்டாவதாக அவர் இயக்கிய 'ஈசன்' படத்திற்குப் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக நடிகராக மட்டுமே தொடர்கிறாரே தவிர, ஒரு படத்தைக் கூட மீண்டும் இயக்கவில்லை. இந்நிலையில் அனுராக் காஷ்யப்பை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் சசிகுமார். “அனுராக் காஷ்யப்பை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன், நான் மதிக்கும் ஒரு படைப்பாளி” என சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு அனுராக் கேட்டபடி விரைவில் தனது இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பிப்பாரா சசிகுமார் ?.