நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
மும்பை பெண் தாதா கங்குபாய் கத்தியவாடி வாழ்க்கையை மையமாக கொண்டு அதே பெயரில் படம் தயாராகி உள்ளது. இதில் கங்குபாயாக ஆலியா பட் நடித்துள்ளார். அஜய் தேவ்கன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் வசித்த கங்குபாய் எப்படி பெண் தாதா ஆனார் என்பது குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டு இருந்தது.
வருகிற 25ம் தேதி கங்குபாய் கத்தியவாடி வெளியாக உள்ள நிலையில், கங்குபாயின் வளர்ப்பு மகன் படத்திற்கு எதிராக போர்கொடி உயர்த்தி உள்ளார். மும்பை ரெட் லைட் ஏரியாவில் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களின் துயர் துடைத்த எங்கள் அம்மாவை விலைமகளாக இந்த படத்தில் மாற்றி விட்டனர் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதோடு மும்பை உயர்நீதி மன்றத்தில் படத்துக்கு தடைகேட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து படத் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள பதிலில் "ஹுசைன் ஜைதி என்பவர் எழுதிய மாபியா குயின் ஆப் மும்பை என்ற நூலை தழுவி, கங்குபாய் குடும்பத்தினரின் எழுத்துபூர்வமான அனுமதியை பெற்றே படம் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.