வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

ஹிந்தித் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி மும்பையில் தனது 69வது வயதில் காலமானார். அவரது மறைவு ஹிந்தித் திரையுலகினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தான் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்து இந்தியத் திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்தார். அதற்குள் மற்றொரு சோகமாக பப்பி லஹரி மறைவு நிகழ்ந்துள்ளது.
ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பப்பி லஹரி பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் 1983ம் ஆண்டில் வெளிவந்த 'அபூர்வ சகோதரிகள்', 1985ல் வெளிவந்த 'பாடும் வானம்பாடி', 1987ல் வெளிவந்த 'கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
'அபூர்வ சகோதரிகள்' படத்தில் 'எங்கெங்கே நீதான்..நான் அங்கங்கே…, அன்னை என்னும் ஆலயம்….,' ஆகிய பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தன. ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து 1985ல் வெளிவந்த 'டிஸ்கோ டான்சர்' படம் தமிழில் ஆனந்த பாபு நடிக்க 'பாடும் வானம்பாடி' என ரீமேக் ஆனது. ஹிந்தியில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது போல தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.
குறிப்பாக 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்' பாடல் அந்தக் காலத்தில் பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களில் கண்டிப்பாக இடம் பெற்ற ஒரு பாடலாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'வாழும் வரை போராடு' ஒரு தன்னம்பிக்கைப் பாடலாக ஒலித்தது. படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்ததால் தமிழிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
பப்பி லஹரி தமிழில் இசையமைத்தது மூன்று படங்கள்தான் என்றாலும் அவரது இசையால் இங்கும் முத்திரை பதித்தார் என்பதை மறக்க முடியாது.




