என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் 'கழுகு, சவாலே சமாளி, சிவப்பு, கழுகு 2' ஆகிய படங்களை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் ராணா டகுபட்டி, ரெஜினா கசான்ட்ரா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்த படம் '1945'. தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த மாதம் ஜனவரி 7ம் தேதி தெலுங்கில் வெளியானது. தமிழிலும் இப்படம் வெளியானதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் படத்தின் நாயகன் ராணா டகுபட்டிக்கும் சம்பள விவகாரம் மற்றும் சில விவகாரங்களில் சண்டை மூண்டது. அது குறித்து ராணா கூட சமூகவலைதளத்தில் படத்தைப் பற்றியும், தயாரிப்பாளர் பற்றியும் கமெண்ட் செய்திருந்தார்.
ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்தை எப்படியோ ஒரு வழியாக கடந்த மாதம் வெளியிட்டார்கள். தெலுங்குப் படத்தைப் பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை எழுதியிருந்தார்கள். படத்திற்கு ராணாவும் டப்பிங் பேசவில்லை. அவருக்குப் பதிலாக யாரையோ டப்பிங் பேச வைத்துள்ளார்களாம்.
இந்நிலையில் இப்படத்தை இன்னும் சில தினங்களில் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்களாம். தியேட்டர்களிலேயே படத்தைப் பார்க்க யாரும் வராத போது டிவியில் யார் படத்தைப் பார்க்கப் போகிறார்கள் என்று டோலிவுட்டினர் கிண்டலடிக்கிறார்கள்.