இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் பேசும்போது அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்
ஆரம்பத்தில், எனது திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பவே, “என் திருமணம் பற்றி என்னைவிட ரசிகர்களாகிய உங்களில் பலருக்குத்தான் அதிக விபரம் தெரிந்திருக்கிறது” என்று கிண்டலாக கூற, அதன்பிறகுதான் ரசிகர்கள் அப்படி கேட்பதை நிறுத்தினார்கள்.