நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் பேசும்போது அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்
ஆரம்பத்தில், எனது திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பவே, “என் திருமணம் பற்றி என்னைவிட ரசிகர்களாகிய உங்களில் பலருக்குத்தான் அதிக விபரம் தெரிந்திருக்கிறது” என்று கிண்டலாக கூற, அதன்பிறகுதான் ரசிகர்கள் அப்படி கேட்பதை நிறுத்தினார்கள்.