ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
தமிழில் மேயாதமான் படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர் உள்பட சில படங்கள் எடுத்தவர் தற்போது குருதி. ஆட்டம். பொம்மை. யானை. ருத்ரன். திருச்சிற்றம்பலம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். ராஜவேல் என்பவரை கடந்த பத்து வருடங்களாக காதலித்து வரும் பிரியா பவானி சங்கர், அவரது பிறந்த நாளையொட்டி தனது சமகவலைதளத்தில் ஒரு புகைப்படத்துடன் வாழ்த்து செய்தியும் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பாயாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதராக மாறி விட்டாய். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. எப்போதுமே புன்னகை, சாகசங்கள், அன்பு, நட்பு, அமைதி ,ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதோடு நான் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் உனக்கு பிடிக்காது என்று தெரியும். அதனால் தான் இதனை பதிவு செய்தேன்'' என தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.