இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஐடி துறையில் பணியாற்றி வரும் வெங்கட் ரெட்டி தயாரித்து, நடிக்கும் படம் யாரோ, அவருடன் உபாசனா, சி.எம்.பாலா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சந்தீப் சாய் இயக்குகிறார், கே.பி.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைக்கிறார். பிப்ரவரி 4ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் சந்தீப் சாய் கூறியதாவது: நானும் வெங்கட்டும் அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருந்தோம், நாங்கள் இருவரும் எப்பொழுதும் சினிமா மீது எங்களுக்குள்ள தீராத ஆர்வத்தை பகிர்ந்துகொண்டோம். வேலையை விட்டுவிட்டு ஒரு குறும்படம் எடுத்தேன். அதைப் பார்த்த வெங்கட், நாங்கள் இணைந்து ஒரு முழு நீள திரைப்படத்தில் பணியாற்றுவோம் என்று ஒப்புக்கொண்டார்.
இது மர்டர் மிஸ்ட்ரி, சைக்கோ த்ரில்லர், ஹாரர் இந்த மூன்றின் கலவையாக உருவாகி இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனித்த பங்களாவில் பெரும்பகுதி கதை நடக்கும். படத்தின் ஹீரோ ஒரு ஆர்கிடெக்ட் தன் பணி நிமித்தமாக அந்த பங்களாவுக்கு செல்கிறார். அந்த பங்களாவிலும் அதை சுற்றிலும் தொடர்ச்சியாக கொலை நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதை வித்தியாசமான பார்வையில் சொல்கிறோம். என்றார்.