புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ஹிந்தித் திரையுலகத்தில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து பரபரப்பாகப் பேசப்படுபவர். இன்று கல்யாணம், விவகாரத்து ஆகியவற்றைப் பற்றி தொடர்ந்து சில டுவீட்டுகளைப் பதிவு செய்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து செய்தியைத் தொடர்ந்துதான் அவர் இதைப் பதிவிட்டிருக்க வேண்டும்.
அதில், “திருமணங்களின் அபாயத்தை, ஸ்டார்களின் விவகாரத்துதான் டிரென்ட் செட்டராக அமைந்து இளைஞர்களை எச்சரிக்கிறது. கல்யாணம்தான் காதலை சீக்கிரத்தில் கொன்றுவிடுகிறது. திருமணம் என்ற ஜெயிலுக்குள் செல்வதற்கு முன்பு, காதல் எது வரை தொடர்ந்து இருக்கிறதோ அதுவரையில் மகிழ்ச்சியின் ரகசியமாக அது இருக்கிறது.
ஒரு திருமணத்தில் காதல் என்ற கொண்டாட்டம் 3 முதல் 5 நாட்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. புத்திசாலிகள் விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் என்பது இருவரின் அபாயமான தகுதிகளை வைத்து அமைதியாக நடைபெற வேண்டும். ஆனால், சுதந்திரமாக விலகுவதால், விவாகரத்து தான் சங்கீத் உள்ளிட்டவைகளுடன் கொண்டாடப்பட வேண்டும். நமது மோசமான முன்னோர்களால் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட தீய பழக்கம் திருமணம். அது தொடர்ந்து சுழற்சியாக சோகத்தைக் கொடுத்து வருகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்களுக்கு வழக்கம் போல கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.




