20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
நடிகர் தம்பி ராமையா மீது சரவணன் என்ற தயாரிப்பாளர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், 2015ம் ஆண்டில் நடிகர் உமா பதியை ராமையாவை வைத்து படம் தயாரிப்பதற்கு தம்பி ராமையாவை அணுகியிருந்தேன். அப்போது படத்தின் தயாரிப்பு பொறுப்பு அனைத்தையும் தான் மேற்கொள்வதாக நடிகர் தம்பிராமையா உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த படம் 5 வருடங்களாக தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் 2020ல்தான் முழுமை பெற்றது. ஆனபோதிலும் படம் இன்னும் வெளியாகவில்லை. காரணம் தம்பி ராமையாவும் படத்தின் நாயகனாக அவரது மகன் உமாபதியும் படம் வெளிவருவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதன் காரணமாக தனக்கு இரண்டு கோடிகள் நஷ்டமானதாக தயாரிப்பாளர் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதோடு படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே என்று தம்பி ராமையாவிடத்தில் கேட்டால், தன்னை மிரட்டுவதாகவும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார். இந்த புகாருக்கு தம்பி ராமையா தரப்பிலிருந்து எந்தமாதிரியான விளக்கம் வெளியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.